UPSC – தமிழ் விருப்பப் பாடம்

TNPSC – குரூப் 2 , குரூப் 2 A முதன்மைத் (Main) தேர்வுக்கான தாள்கள்.

TNPSC – குரூப் 4 – பொதுத் தமிழ் மட்டும்.

இளங்கலை, முதுகலை தமிழ் மாணவர்களுக்கு இலக்கணம் மட்டும்

UPSC – தமிழ் விருப்பப் பாடம்

வகுப்பு நேரம்

  • வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வகுப்பு நடைபெறும்
  • வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்கள்
  • வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்களில் மாலை 4. மணி முதல் 7 மணிவரை
  • ஞாயிறு அன்று மதியம் 2 மணி முதல் 4 மணிவரை வாரத்தேர்வு. பின் 4. மணி முதல் 7 மணிவரை வகுப்பு நடைபெறும்

மாணவர் சேர்க்கை

  • முதல்நிலைத் தேர்வுக்கு(prelims) முன்னும், தேர்வு முடிந்து 5 நாட்களுக்குள்ளும் மாணவர் சேர்க்கை நடைபெறும்
  • சேர்க்கை அன்றே தமிழ் நூல்கள் அனைத்தும் வழங்கப்படும்
  • முதல்நிலைத் தேர்வு முடிந்த 7 நாட்களுக்குள் வகுப்பு தொடங்கிவிடும்

தேர்வுகள்:

  • அனைத்துப் பாடங்களும் முழுமையாக நடத்தி முடிக்கப்படும்
  • முதன்மைத் தேர்வில் வினாக்களைப் புரிந்துகொள்ளும் முறை – வினாக்களைத் தேர்ந்தெடுக்கும் முறை – மதிப்பெண்ணுக்குத்தக விடை எழுதும் முறை – கால மேலாண்மை (Time Management) போன்றவற்றைக் கற்பித்து அதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும்
  • ஒரு நூல் முடிந்ததும் அதில் கேட்கப்பட்ட பழைய வினாக்களுக்கான விடைகள் குறித்துக் கலந்துரையாடல் நடைபெறும்
  • கலந்துரையாடல் முடிந்ததும் அடுத்த வாரம் அதில் வாரத்தேர்வு நடபெறும்
  • 10 – 12 வாரத்தேர்வுகள் நடத்தப்படும்
  • விடைத்தாளைத் திருத்தி மதிப்பெண் கொடுத்து அடுத்தவாரமே மாணவர்களிடம் வழங்கப்படும்
  • இறுதியாக தாள் – 1, தாள் – 2 க்குத் தனித்தனியே மாதிரித் தேர்வு நடத்தப்படும்
  • அனைத்துத் தேர்வுகளுக்கும் விடைத்தாளை அகாடமியே கொடுக்கும்

இலவச தேர்வுப் பயிற்சி

  • ஆண்டுதோறும் முதல்நிலைத் தேர்வில்(prelims) வெற்றி பெற்ற தேவிராவின் மாணவர்களுக்கு மட்டும் இலவசமாக 8 தேர்வுகள் நடத்தி விடைத்தாள் திருத்தி மதிப்பெண்ணிட்டுக் கொடுக்கப்படும்
  • தேவிராவிடம் எந்த ஆண்டு படித்திருந்தாலும் முதல்நிலைத் தேர்வில்(prelims) வெற்றி பெற்ற மாணவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்

TNPSC – குரூப் 2 , குரூப் 2 A முதன்மைத் (main ) தேர்வுக்கான தாள்கள்

  • தமிழ்நாடு அரசு அறிவித்தவுடன் வகுப்புகள் தொடங்கும்
  • மாணவர் சேர்க்கை விவரம் அப்போது தெரிவிக்கப்படும்
  • சனி,ஞாயிறு ஆகிய இரு நாட்கள் மட்டும் காலை 9 மணி முதல் 12 மணிவரை வகுப்பு நடைபெறும்
  • இத் தேர்வுக்கான தேவிராவின் நூல் இலவசமாக வழங்கப்படும்
  • வாரம்தோரும் தேர்வு நடைபெறும்
  • முதன்மைத் தேர்வுக்குமுன் மாதிரித் தேர்வுடன் வகுப்பு முடியும்

TNPSC – குரூப் 4 – பொதுத் தமிழ் மட்டும்

  • தமிழ்நாடு அரசு அறிவித்தவுடன் வகுப்புகள் தொடங்கும்
  • மாணவர் சேர்க்கை விவரம், வகுப்பு குறித்து அப்போது தெரிவிக்கப்படும்

இளங்கலை, முதுகலை தமிழ் மாணவர்களுக்கு இலக்கணம் மட்டும்

  • சனி, ஞாயிறு இருநாட்கள் மட்டும் காலையில் வகுப்பு நடக்கும்
  • பாடத்தொடர்பான இலக்கணங்கள் நுட்பமாகவும் எளிமையாகவும் கற்பிக்கப்படும்